எங்க வீட்டு பிரிட்ஜும்
என் கணவருக்கு சென்னைக்கு மாற்றலான போது, அங்கே குடித்தனத்திற்கு தேவையான சில பொருட்கள் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு போனது. அதில் ஒன்றுதான் எங்கள் பிரிட்ஜ். எப்போவாவது இங்கு வரும்போது தானே தேவைப்படும், அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு இருந்துட்டேன். அது எனக்கு ஒரு அவசியமான விஷயமாக தோணவில்லை. இங்கு அடிக்கடி வரவேண்டிய அவசியம் வந்தபோது தான் இந்த பிரிட்ஜை எவ்வளவு மிஸ் பண்ணுகிறோம்னு தெரிஞ்சுது.
ஏறக்குறைய நம் பாட்டி வாழ்ந்த பழைய காலத்திற்கே திரும்பி போய்விட்டேன். எவ்வளவுதான் நம்ம கணவர், குழந்தைகள், எல்லோரும் ‘தினசரி இட்லி, இல்லைன்னா தோசை’ ன்னு முணுமுணுத்தாலும் அதை காதில் வாங்காமல் ஞாயிற்றுகிழமை தோசைக்கு அரைத்து திங்கள் கிழமை தோசை மாவை பிரிட்ஜ்க்குள் திணிக்கும் நம் பழக்கத்தை நம்மால் மாற்றிக்கொள்ள முடியாது. நானும் மாவை வைக்க பிரிட்ஜை தேடினால் அது இல்லை. அப்புறம் மேலே loft இல் இருந்த எங்க அம்மாவோட பெரிய பாத்திரத்தை எடுத்து தண்ணீர் ஊற்றி அதற்குள் மாவை உள்ளே வைத்து அந்த தண்ணியை தினமும் மாற்றி… போதும்….போதும்….
தயிருக்கும் இதே கதைதான்…ஆனாலும் புளித்துவிடும். குழந்தைகளுக்காக காலையில் உரை ஊற்றுவார்களே அந்த மாதிரி செய்து கொண்டிருந்தேன்.
மாவு ஓகே….தயிர் ஓகே….காய்கறி?…
உருளை கிழங்கு, வெங்காயம் எல்லாம் இந்த லிஸ்டில் இருந்து ஏற்கனவே தப்பித்தது.
கத்திரிகாய்….பிரிட்ஜுக்குள் வைத்தால் அதிலிருக்கும் சிறு புழுக்கள் இருப்பது தெரியாமல் போய்விடும், வைக்க கூடாதுன்னு எங்க அத்தை சொல்லுவாங்க….அப்ப ஓகே…கத்திரிக்காயும் தப்பித்தது.
வாழைக்காய்….என் மச்சாண்டார் வீட்டில் வாழைக்காயை உள்ளே வைப்பதை பார்த்து நானும் அப்படியே செய்து வந்தேன். இப்போ அதுவும் வெளியே….காலையில் எழுந்து பார்த்தால் அது வாழைப்பழம் ஆகியிருக்கும்…..Good….
அடுத்தது தக்காளி…..தக்காளி செடி போட்டிருந்தேன். தக்காளியாக காய்த்து கொட்டியது. வீட்டுக்கு வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லோருக்கும் தினமும் தக்காளி திருவிழாதான்…..ஒரு கட்டத்தில் முடியாமல், எல்லா தக்காளி செடியும்cut…
தேங்காய் உடைத்தால், ஒரு பாதி உபயோகித்துவிட்டு மறு பாதி தண்ணீர் பாத்திரத்திற்குள்…..தேங்காய்க்கு எதுக்கு தண்ணீர் என்கிறீர்களா….எறும்புக்கு பயந்துதான்…..பிரிட்ஜ் என்பது எறும்பிடம் இருந்தும் நம் பொருட்களை பாதுகாக்கும் என்ற அரிய உண்மையை அப்போதான் கண்டுபிடிச்சேன்.
நல்லவேளை கருவேப்பிலையும் பச்சை மிளகாயும்செடியிலேயே இருந்ததால் அதற்கு பிரிட்ஜ் தேவைப்படவில்லை….
அப்புறம்soft drinks, squash, soya sauce, mayonnaise sauce, green chilli sauce, butter slices…எல்லாம் கட்….tomato ketchup, tamarind paste, ginger garlic paste எல்லாம் sachetதான்….
ஸ்வீட்ஸ் நிறைய இருந்தால் எல்லாம் பிரிட்ஜ் உள்ளே போகும். இப்போ டைனிங் டேபிளின் மேல். வீணா போகுதேன்னு சாப்பிட்டு சாப்பிட்டு வெயிட் போட்டதுதான் மிச்சம்.
அப்புறம் குழம்பு, கறி பழசு எல்லாம் எங்கே என்கிறீர்கள்….ஒரு குட்டி மண் சட்டி வாங்கி வந்து ஒரே சுண்டக்கறிதான். அது ஒரு தனி சுவைதான். எங்க பாட்டி ஞாபகம் வந்தது. நான் சாப்பிட்டேன். ஆனால் எங்க வீட்டு ரெகுலர் விசிட்டர் மிஸ்டர் காக்கா சாப்பிட மறுத்திட்டார்.
நான் எப்போ கோயம்புத்தூர் வருவேன்னு பார்த்துகிட்டே இருப்பாங்க போல, ஒரேguests…சும்மா வாக்கிங் போற பிரண்ட்ஸ் கூட வீட்டுக்குள் வந்து செல்வார்கள். அடிக்கடி பால் பாக்கெட் கொண்டு வரச்சொல்லி பக்கத்து கடைகாரப்பையன் என்னை பார்த்தாலே ஓடிவிடுகிறான். பிரிட்ஜ் இல்லாமல் இருக்கவே முடியாதா என்ற நிலைக்கு வந்துவிட்டேன். ஏற்கனவே உள்ளதும் பழசாகி சரியாக வேலை செய்யாததால் புதுசு ஓன்று வாங்கிவிடுவோம் என்று முடிவு செய்து வாங்கியும் விட்டேன்.
ஒரு வாரம் முன்புதான் புது பிரிட்ஜ் வீட்டுக்கு வந்தது. இப்போ உலகத்தில் இருப்பது எல்லாம் அதற்குள்தான். எல்லாவற்றையும் அதற்குள் அடைத்த பிறகுதான் என்னால் நிம்மதியாக இருக்க முடிந்தது.
இப்போது உட்கார்ந்து யோசித்து பார்த்தால், சே என்ன வாழ்க்கை இது… ஸ்கூல் படிக்கிற காலத்தில் இருந்தே நான் புத்தரின் தீவிரfan.
ஆசைதான் அனைத்து துன்பங்களுக்கும் காரணம்; ஆசையை அறவே ஒழி

















